தமிழக அமைச்சர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்ப இந்தியா நடவடிக்கை!

September 22nd, 2009 Save & Share

பிரதமர் மன்மோகன் சிங்கை திமுக – காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் எம்.பிக்களும் சந்தித்து இலங்கைக்குத் தமிழக எம்பிக்கள் குழு ஒன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்பிக்களும், காங்கிரஸ் எம்பி்க்களும், விடுதலைச் சிறுத்தை கட்சி எம்பியான திருமாவளவனும் சந்தித்தனர்.

அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் உடனிருந்தார். இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியமர்த்த அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும்-

இலங்கைக்குத் தமிழக எம்பிக்கள் குழுவை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்-என்ற கோரிக்கைகளை அவர்கள் பிரதமரிடம் முன்வைத்தனர். கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தாக எம்பிக்கள் பின்னர் தெரிவித்தனர்.