நேற்று முதல் முழுஉண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்க் கைதி : சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தகவல்!
மூன்றரை வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற யாழ்பாணத்தைச் சேர்ந்த தேவதாசன் கனகசபை (வயது 55 ) என்ற கைதி தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த 49 தினங்களாக தேநீரையும் நீரையும் மாத்திரம் பருகி போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில் 50 ஆவது நாளான நேற்று முதல் களுத்துறை சிறைச்சாலையில் முழுமையான உண்ணாவிரதத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

