Archive for 'செய்திகள்' Category

நவீன ஆயுதங்களை கண்டறியும் ஆயுதங்கள்!

July 26th, 2008

நவீனரக ஆயுதங்களை கண்டறியும் புதிய ரக ராடர்களை கொள்வனவு செய்துள்ள அரசு அவற்றை உடனடியாக களமுனைகளில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடு ஒன்றிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த ராடர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மணலாறு பகுதிகளிலேயே கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள இனவாத அரசினால் அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜூலை!

July 25th, 2008

1983ம் ஆண்டு தமிழ்மக்களை அழித்து கொரூர ஆட்சிநடாத்திய ஜ.தே.க.யின் ஜே.ஆர் அரசினால் கட்டவிள்த்துவிடப்பட்டதே இந்த ஜூலை 83 படுகொலையாகும். ஜே.ஆர்.அரசின் இனவெறிக்கு புலிகளின் தலைவர் பிரபாகரனும் ஒத்துழைப்பு நல்கியதன் பிரகாரமே இவ் கறுப்பு ஜூலை கொழும்பு உட்பட தென்னிலங்கையில் கட்டவிள்த்து விடப்பட்டு தமிழ் மக்கள் நிற்கதியாக்கப்பட்டதுடன் வடக்கு நோக்கி இடம்பெயரவும், அவர்களது சொத்துக்கள் சூறையாடப்படுவதற்கும், சிறைகளில் அடைத்துவைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள், தலைவர்கள், போராளிகள் படுகொலை செய்யப்படுவதற்கும் வித்திட்டது இவ் கறுப்பு ஜூலை என்பது நினைவு மீட்கப்படவேண்டியது.

தமிழ்கட்சி தலைவர்கள் ஜரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு சந்திப்பு!

July 25th, 2008

இலங்கை வந்துள்ள ஜரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு தமிழ்கட்சிகளான த.வி.கூ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) அணி ஆகியவற்றின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளது. இன்று மாலை இடம்பெற்ற இவ் சந்திப்பில் வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், தி.ஸ்ரீதரன் ஆகியோர் தமிழ்கட்சிகளின் சார்பில் பங்கு கொண்டனர்.

வவுனிக்குளத்தில் உக்கிரமோதல் புலிகளின் 30 சடலங்கள் படையினரால் மீட்பு!

July 25th, 2008

படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று மாலை மல்லாவிக்கு தெற்க்கே இடம்பெற்ற மோதலின்போது புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பரிவின் முக்கியஸ்தர் உட்பட 30க்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லவன் என்ற புலிகளின் முக்கியஸ்தர் உட்பட பலியான புலிகளின் 30 சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னேறிவரும் படையினருக்கு எதிரான வலிந்த தாக்குதலை புலிகள் மேற்கொண்டபோதே இவ் இழப்பு புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

புலிகளால் கொல்லப்பட்டுவரும் தமிழர்களையும், தமிழ் தலைமைகளையும் கண்டுகொள்ளாத சம்பந்தன் நீலிக்கண்ணீர்!

July 25th, 2008

புலிகளால் கடந்த 25 ஆண்டுகளாக பல தமிழ் கல்விமான்கள், போராளிகள், பொதுமக்கள், தமிழ் தலைவர்கள் என பலர் கொல்லப்பட்டுவிட்டார்கள். இன்னும் கொல்லப்பட்டு வருகின்றார்கள். புலிகளின் வதை முகாமில் இன்னும் ஏராளமான தமிழ்மக்கள் கைதிகளாக மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். சொந்த மண்ணில், சொந்த மக்களையே கொலை செய்யும் புலிகளை கண்டிக்க முதுகெலும்பற்ற சம்பந்தன் சிங்களத்திடம் மட்டும் நியாயம் கேட்டு நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்.

புலிகளின் பொறியில் விழுவதற்கு அரசு தயாரில்லை!

July 24th, 2008

புலிகளின் பொறியில் விழுவதற்கு அரசு தயாரில்லையென தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்றது. புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் இங்கு எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வவுனிக்குளம் வன்னிபுலிகளின் பிடியில் இருந்து மீட்பு!

July 24th, 2008

வவுனியா மன்னார் பகுதிகளில் இருந்து வன்னியை மீட்கும் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் மல்லாவிக்கு தென்கிழக்கே அமைந்துள்ள பாண்டியன்குளம், வவுனிக்குளம் குளகட்டு பகுதியையும் இன்று காலை 10:00 மணியளவில் கைப்பற்றியுள்ளனர். 57வது இராணுவ படைப்பரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கையில் 10 சதுர கிலோ மீற்றார் சுற்றளவையுடைய வவுனிக்குளம் குளக்கட்டு பகுதி படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியை பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தை வன்னிப்புலிகளால் சுட்டு படுகொலை!

July 24th, 2008

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வர்த்தக நிறுவனம் ஒன்றினை நடாத்திவந்த 33 வயதுடைய மூக்கன் சுரேஸ் என்பவர் வன்னிபுலிகளின் பிஸ்ரல் குழுவினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். முன்னைநாள் புளொட் உறுப்பினர் என்று கருதப்படும் மேற்படி வர்த்தகர் புளொட் இயக்கத்தினை விட்டு பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறி திருமணம் முடித்து தனது மூன்று பிள்ளைகள் குடும்பத்துடன் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டுவந்தபோதே நேற்றையதினம் புலிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பிரதமருக்கு கொலை அச்சுறுத்தல்- த அவுஸ்ரேலியன் பத்திரிகை!

July 23rd, 2008

சார்க் மாநாட்டுக்காக ஸ்ரீ லங்கா வரவிருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தற்போதுள்ள நிலையில் புலிகள் இயக்கத்தின் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதாகவும் இந்த வகையில் புலிகள் இயக்கத்தினர் ஸ்ரீ லங்காவில் வைத்து இந்திய பிரதமர் மீது தற்கொலை தாக்குதலையோ அல்லது வேறு வகையிலான கொலை தாக்குதலையோ மேற்கொள்ளக் கூடும் எனவும் பிரபல அவுஸ்திரேலிய பத்திரிகையான “த அவுஸ்ரேலியன்’ (THE AUSTRLIAN) செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு கடந்த 18 ஆம் திகதி வெளியான மேற்படி அவுஸ்திரேலியப் பத்திரிகையில் பிரசுரமாயிருக்கும் [...]

நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன்சிங் அரசு வெற்றி!

July 23rd, 2008

இந்தியப் பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பரபரப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற நம்பிக்கைத் தீர்மான இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசு வெற்றிபெற்றுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும் எதிராக 256 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்த நிலையில் 19 வாக்குகளால் ஆளுங்கட்சி வெற்றிபெற்றுள்ளது.