Archive for 'செய்திகள்' Category

வட மாகாண சபைக்கு காணி,பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் ராஜித சேனாரத்ன!

May 24th, 2013

வட மாகாண சபைக்கு 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த மாகாண சபைத் தேர்தல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ் நடைபெறும் எனவும் அந்த மாகாணத்திற்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.

பலமான எங்களை அரசாங்கம் அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது : அமைச்சர் ஹக்கீம்!

May 24th, 2013

கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

யுத்தம் முடிந்து 4ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் மீள்குடியேற்றப்படாத மக்கள் -அதிகாரிகள் தொடர்ந்தும் பாராமுகம் : செட்டிகுள மக்கள்!

May 24th, 2013

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 4ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒட்ராக்குள மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாமையால் தாம் தொடர்ந்தும் அவலங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள மத முரண்பாட்டுக்கு பௌத்தர்கள் காரணமானவர்கள் இல்லை-நல்லிணக்கத்தை சீர்குலைக்கவே சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் : மஹிந்த ராஜபக்ச!

May 24th, 2013

இலங்கையில் உள்ள பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல.மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவே சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சமாளிக்க முடியாத பொருளாதார நெருக்கடியால் அரசாஙகம் திணறுகின்றது : ஜே.வி.பி!

May 24th, 2013

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று ஜே.பி.வி கொழும்பில் நடத்திய மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிரான பாத யாத்திரையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுதந்திர பறவைகளாக போர்க் குற்றவாளிகள் உலாவுகிறார்கள் : அரசு மீது சர்வதேச மன்னிப்புச் சபை சாடல்!

May 24th, 2013

இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள்,மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காணி,பொலிஸ் அதிகாரங்களை இரத்துச் செய்யாது வடக்குத் தேர்தலை நடத்தினால் அதுவே ‘அஸ்தமனம்’ : அரசாங்கத்துக்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை!

May 24th, 2013

காணி,பொலிஸ் அதிகாரங்களை இரத்துச் செய்யாது வட மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடத்தினால் அதுவே அரசாங்கத்தின் ‘‘அஸ்தமனமாக’’ அமையும் என்று எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இந்தியாவின் தேவையை நிறைவேற்ற இலங்கை இந்தியாவின் காலனித்துவ நாடல்ல என்றும் தெரிவித்துள்ளது.

தமிழர்களும் மனிதர்கள்தானே-நாளை என்னையும் 4ஆம் மாடியில் விசாரணை செய்வீர்களா?:அமைச்சர்களிடம் சம்பந்தன் தெரிவிப்பு!

May 24th, 2013

சிவசக்தி ஆனந்தனை சில தினங்களுக்கு முன்னர் விசாரணை செய்தீர்கள்.நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? தமிழர்களும் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்கள்தானே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அமைச்சர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினார்.

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்: கோத்தபாய ராஜபக்ஷ!

May 24th, 2013

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். எனவே மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் டொமினிக்கன் குடியரசில் கைது!

May 24th, 2013

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் டொமினிக்கன் குடியரசில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜையான கருணாநிதி நல்லதம்பி என்பவரே இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பலுக்கு தலைமை தாங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.