மக்களின் இறைமையை வலுப்படுத்துவதற்கே அரசியலமைப்புத் திருத்தம் : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59வது மாநாட்டில் ஜனாதிபதி!
எனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளுவதற்காக அரசியல் யாப்பு திருத்தத்தை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த காரணத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை இந்த யாப்பு திருத்தத்தில் நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
மேலும்




எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.இலங்கையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறைகள் திருப்திகரமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சிறைக்கூட சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இரு கைதிகள் தப்பிச்சென்றுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் பலவிதம் உண்டு. ஆனால் மலேசியாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளி புது விதம். பள்ளிப் பருவத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகும் பெண்களுக்காக மலேசியாவில் இந்தத் தனி பள்ளி ஒன்று திறக்கப்படவுள்ளது.மலேசியாவின் தி ஸ்டார் நாளிதழில் இது தொடர்பாக மலாக்கா அதிகாரிகள் தெரிவித்ததாக வெளிவந்துள்ள செய்தி.
கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளை வெளிமாவட்டத்தில் உள்ளோருக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா தெரிவித்துள்ளார்.வந்தாறுமூலை மகா விஷ்ணு வித்தியாலயத்தில் நடைபெற்ற பட்டதாரிகள் முன்பள்ளி வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடக்குக்கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீளகுடியேற்றம் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவுடன் தாம் பேச்சு நடத்தியதாகவும் அதுகுறித்து அவர் கவனம் செலுத்துவதாக தெரிவித்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா தெரிவித்துள்ளளார்.
