மக்களின் இறைமையை வலுப்படுத்துவதற்கே அரசியலமைப்புத் திருத்தம் : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59வது மாநாட்டில் ஜனாதிபதி!

September 3rd, 2010

எனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளுவதற்காக அரசியல் யாப்பு திருத்தத்தை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த காரணத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை இந்த யாப்பு திருத்தத்தில் நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
மேலும்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்!

September 3rd, 2010

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.இலங்கையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறைகள் திருப்திகரமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாட்டில் அரச ஊழியர்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் தோன்றியுள்ளது : எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை!

September 3rd, 2010

அரச ஊழியர்களின் உரிமைகள் பறிபோகும் ஆபத்தான சூழல் நாட்டில் தோன்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார். பதினெட்டாவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக சுயாதீன அரசு சேவை ஆணைக்குழு மற்றும் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றை, நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும்

கல்முனை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட கைதிகள் இருவர் தப்பியோட்டம்!

September 3rd, 2010

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சிறைக்கூட சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இரு கைதிகள் தப்பிச்சென்றுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

மலேசியாவில் திருமணம் ஆகாமல் கர்ப்பிணிகளாகும் மாணவிகளுக்கு சிறப்பு பள்ளி!

September 3rd, 2010

பள்ளிகளில் பலவிதம் உண்டு. ஆனால் மலேசியாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளி புது விதம். பள்ளிப் பருவத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகும் பெண்களுக்காக மலேசியாவில் இந்தத் தனி பள்ளி ஒன்று திறக்கப்படவுள்ளது.மலேசியாவின் தி ஸ்டார் நாளிதழில் இது தொடர்பாக மலாக்கா அதிகாரிகள் தெரிவித்ததாக வெளிவந்துள்ள செய்தி.
மேலும்

கிழக்கு காணிகளை வெளிமாவட்டத்தோருக்கு வழங்க முடியாது : கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா!

September 2nd, 2010

கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளை வெளிமாவட்டத்தில் உள்ளோருக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா தெரிவித்துள்ளார்.வந்தாறுமூலை மகா விஷ்ணு வித்தியாலயத்தில் நடைபெற்ற பட்டதாரிகள் முன்பள்ளி வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும்

மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளி பகுதியில் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு : கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

September 2nd, 2010

மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளி பகுதியில் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பாகக் கடந்த திங்கட்கிழமை (30 ஆம் திகதி) ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவுடன் மக்களின் மீள்குடியேற்றம் குறித்து கலந்துரையாடினோம் : நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா!

September 2nd, 2010

வடக்குக்கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீளகுடியேற்றம் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவுடன் தாம் பேச்சு நடத்தியதாகவும் அதுகுறித்து அவர் கவனம் செலுத்துவதாக தெரிவித்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா தெரிவித்துள்ளளார்.
மேலும்

‘பிளக்பெரி’ சர்ச்சையால் கூகுள்,ஸ்கைப் தரவுகளில் பிரச்சினை!

September 2nd, 2010

இந்தியாவில் நிலவிய ‘பிளக்பெரி’ சர்ச்சையைத் தொடந்து கூகுள் மற்றும் ஸ்கைப் ஆகியவற்றின் தரவுகள் தொடர்பில் புதிய பிரச்சினை எழுந்துள்ள்தாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.’பிளக்பெரி’ கையடக்க தொலைபேசியில் நிலவும் பாதுகாப்பு குறைபாட்டினை இரண்டு மாதங்ளுக்குள் சரி செய்ய வேண்டுமென இந்திய மத்திய அரசு காலக்கேடு விதித்துள்ளது.
மேலும்

பதில் பிரதம நீதிபதியாக ஷிரானி பதவிப் பிரமாணம்!

September 2nd, 2010

நீதிபதி டாக்டர் ஷிரானி பண்டாரநாயக்க, பதில் பிரதம நீதிபதியாக இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.இது தொடர்பான நிகழ்வு இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டார்.