முக்கிய அறிவித்தல்!

May 18th, 2012

நெருப்பின் மின்னஞ்சல் முகவரி திருடப்பட்டுள்ளது. வாசகர்களே அவதானமாக இருந்து கொள்ளுங்கள். நெருப்பின் வருகையை விரும்பாத தீயசக்திகளின் நடவடிக்கையே இந்த திருட்டு நடவடிக்கையாகும். கடந்த காலங்களில் பல்வேறு அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள், நெருப்பின் வரவை தடுத்தல் என்று தொடர்ந்த சதி நடவடிக்கை தற்போது மின்னஞ்சல் முகவரியை திருடி நெருப்பின் வரவை தடுப்பதற்கான முயற்சிகள என பல்வேறு மட்டங்களில் இருந்து இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.
புதிய மின்னஞ்சல் முகவரி editor@neruppu.com
மேலும்

காலத்தை வீணடிக்கும் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க மாட்டோம்- ஜே.வி.பி ரில்வின் சில்வா!

May 18th, 2012

உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லையென ஜே.வி.பி. அறிவித்துள்ளது. இந்தத் தெரிவுக்குழுவை நியமிப்பது தொடர்பாக அரசாங்கம் நேர்மையாக செயற்படவில்லை. இதனால் அதில் அங்கவிக்கப் போவதில்லையென கட்சி தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
மேலும்

அமெரிக்கா சென்றிருக்கும் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஹிலாரி கிளின்டன் இன்று சந்திப்பு!

May 18th, 2012

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்திக்கின்றார்.அமைச்சர் பீரிஸிற்கும் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரிக்குமிடையிலான இருதரப்புச் சந்திப்பின்போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

இலங்கைத்தீவில் வடக்கு – கிழக்குக்கு சுயாட்சியே தேவை : வலியுறுத்துகிறார் எரிக் சொல்ஹெய்ம்!

May 18th, 2012

இலங்கைத்தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்கு கிழக்குக்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டு மென்பதில் அனைத்துலக மட்டத்தில் பெரும் ஆதரவு நிலவுகின்றது. அதே கருத்தினையே நானும் கொண்டிருக்கின்றேன் என நோர்வேயின் முன்னாள் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ், பல்கலைக்கழக மாணவ பிரதிநிதியின் தாக்குதலை கண்டித்து மாணாவர்கள் போராட்டம் : துணைவேந்தர் உருவப்படம் எரிப்பு!

May 18th, 2012

இன்று காலை யாழ், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து. மாணவர்களுக்கான பாதுகாப்பை உரிய அதிகரிகள் வழங்க வேண்டும் எனக்கோரி அனைத்துப் பீடம் மாணவர்களும் இன்றைய தினம் துணைவேந்தர் அலுவலகத்திற்கு முன்னால் நின்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும்

இனந்தெரியாத குழுவின் தாக்குதலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் படுகாயம்!

May 18th, 2012

முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வுகளில் பல்கலைக்கழக சமூகம் உணர்வுபூர்வமாக பங்கெடுத்து வரும் வேளையில் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியச் செயலாளர் எஸ்.தர்ஷானந் இன்று காலை இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடுமையாக்கத் தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் தர்ஷானந் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க் கப்பட்டுள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்கால் துயர் பகிர்வு தமிழர் தாயகம் எங்கும் இன்று : புலம்பெயர் நாடுகளிலும் விசேட நிகழ்வுகள் சுடரேற்றி அஞ்சலி செய்யுமாறு அழைப்பு!

May 18th, 2012

2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் கட்டவிழ்ந்த இன அழிப்புப் பெரும் துயரை நினைவு கூர்ந்து அந்தக் குறுகிய வன்முறை வெளியில் தம்மை ஆருதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகப் பிரதேசங்களெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றன.
மேலும்

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய மேல் நீதிமன்றம் அனுமதி!

May 18th, 2012

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, இராணுவத்திலிருந்து தப்பி சென்ற வீரர்களை தங்கவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மேலும்

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க இலங்கை தீர்மானம்!

May 17th, 2012

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் திட்டத்திற்காக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை அரசாங்கம் திருத்தவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார். பிரஜாவுரிமை இரத்துச்செய்யப்பட்ட வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதற்காக வெளிநாட்டு இலங்கையர்கள் என்னும் புதிய திட்டத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் இன்றைய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

ஸ்ரீ.ல.மு. காங்கிரஸுக்கே கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி-ஜனாதிபதியும் தெளிவாக உள்ளார் : பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட்!

May 17th, 2012

கிழக்கில் மாகாண மட்டத்தில் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென்பதில் ஜனாதிபதியும் முக்கிய உறுப்பினர்களும் தெளிவாக இருக்கிறார்கள் என முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மேலும்