சரத் பொன்சேகாவை கண்டு பிடித்து தருமாறு பொன்சேகா குடும்பம் ஜ.சி.ஆர்.சி.யிடம் கோரிக்கை!

February 9th, 2010

நேற்றையதினம் இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னைநாள் ஜனாதிபதி வேட்பாளரும் இராணுவ ஜெனரலுமான சரத் பொன்சேகா எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டு பிடித்து தருமாறு அவரது குடும்பத்தினர் ஜ.சி.ஆர்.சி. யுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
மேலும்

ஜனாதிபதி நாடு திரும்பினார்!

February 9th, 2010

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யாவுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் நாடு திரும்பினார். இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தனது உத்தியோகபூர்வ முதல் விஜயமாக ரஷ்யா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரு தரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரஷ்யத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும்

ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்!

February 9th, 2010

ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளர். இது தொடர்பான விண்ணப்பத்தை அவர் பொதுஜன ஐக்கிய முன்னணி செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளதாக “இளைஞருக்கு நாளை” என்ற அமைப்பின் ஊடகச் செயலாளர் அசேல திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும்

பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது-பி.பி.சி.யிடம் ரணில் கண்டனம்!

February 9th, 2010

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க. அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார்.
மேலும்

மூன்று மாதங்களில் வடக்கின் அரச அலுவலகங்கள் புனரமைப்பு!

February 9th, 2010

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மாவட்டங்களில் அரச நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டு தற்போது இயங்கி வருகின்றன எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சேதமடைந்த அனைத்து அலுவலகங்களையும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க, தெரிவித்தார். இந்த அவசர புனரமைப்புச் செயற்திட்டத்திற்கென 175 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கபட்டுள்ள இடம் இரகசியமாகவே பேணப்படும் :இராணுவப் பேச்சாளர்!

February 9th, 2010

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக சகல வசதிகளுடனும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.எனினும் அவர் தடுத்து வைக்கபட்டுள்ள இடம் இரகசியமாகவே பேணப்படும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும்

எனது கணவர் கைதாகவில்லை!கடத்தப்பட்டுள்ளார்-அனோமா பொன்சேகா!

February 9th, 2010

“எனது கணவர் கைது செய்யப்படவில்லை. கடத்தப்பட்டிருக்கிறார். முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசு இது” என்று திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
மேலும்

பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி : முன்னாள் மந்திரி காயம்!

February 9th, 2010

பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் மந்திரி காயமடைந்தார். அவரது ஆதரவாளர் இருவரும் உதவியாளர் இருவரும் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாடாளுமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் 24ஆந்திகதி நடைபெறுகிறது. இதில் அவாமி முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் ஷேக் ரஷீத் அகமது போட்டியிடுகிறார். இவர் முன்னாள் அதிபர் முஷரப்பின் அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர்.
மேலும்

பிரித்தானியாவுக்கு சட்டபூர்வ விசாவுடன் சென்ற மாணவன் நாடு கடத்தப்பட்டார்!

February 9th, 2010

பிரித்தானியாவில் மேற்படிப்பை தொடர்வதற்காக கொழும்பில் இருந்து சட்டபூர்வ விசா பெற்று லண்டனுக்கு வருகைதந்த இலங்கை மாணவன் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். உரிய விசா ஆவணங்களுடன் மேற்படி இளைஞன் வந்தபோதும் அந்த மாணவனை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.
மேலும்

யுத்தத்தால் பிரிந்துள்ள மனங்களை ஒன்றிணைத்து இலங்கையில் சொர்க்கத்தை உருவாக்க உதவுங்கள்:உலக நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு!

February 9th, 2010

யுத்தத்தினால் பிரிந்துள்ள மனங்களை மீள ஒன்றிணைத்து இலங்கையை சிறிய சொர்க்கமாக உருவாக்கும் நடவடிக்கைக்கு உலகநாடுகள் தம்முடன் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய பல்கலைக்கழக நிகழ்வொன்றில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு கல்விமான்கள் மத்தியில் உரைநிகழ்த்தியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
மேலும்