சரத் பொன்சேகாவை கண்டு பிடித்து தருமாறு பொன்சேகா குடும்பம் ஜ.சி.ஆர்.சி.யிடம் கோரிக்கை!
நேற்றையதினம் இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னைநாள் ஜனாதிபதி வேட்பாளரும் இராணுவ ஜெனரலுமான சரத் பொன்சேகா எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டு பிடித்து தருமாறு அவரது குடும்பத்தினர் ஜ.சி.ஆர்.சி. யுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
மேலும்



இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க. அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மாவட்டங்களில் அரச நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டு தற்போது இயங்கி வருகின்றன எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சேதமடைந்த அனைத்து அலுவலகங்களையும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க, தெரிவித்தார். இந்த அவசர புனரமைப்புச் செயற்திட்டத்திற்கென 175 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக சகல வசதிகளுடனும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.எனினும் அவர் தடுத்து வைக்கபட்டுள்ள இடம் இரகசியமாகவே பேணப்படும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“எனது கணவர் கைது செய்யப்படவில்லை. கடத்தப்பட்டிருக்கிறார். முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசு இது” என்று திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் மந்திரி காயமடைந்தார். அவரது ஆதரவாளர் இருவரும் உதவியாளர் இருவரும் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாடாளுமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் 24ஆந்திகதி நடைபெறுகிறது. இதில் அவாமி முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் ஷேக் ரஷீத் அகமது போட்டியிடுகிறார். இவர் முன்னாள் அதிபர் முஷரப்பின் அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர்.
யுத்தத்தினால் பிரிந்துள்ள மனங்களை மீள ஒன்றிணைத்து இலங்கையை சிறிய சொர்க்கமாக உருவாக்கும் நடவடிக்கைக்கு உலகநாடுகள் தம்முடன் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய பல்கலைக்கழக நிகழ்வொன்றில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு கல்விமான்கள் மத்தியில் உரைநிகழ்த்தியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு அழைப்பு விடுத்தார்.