நளினி வழக்கு விசாரணையை இழுத்தடிப்பதாக நீதிமன்றம் குற்றச்சாட்டு!
நளினியின் விடுதலை தொடர்பான வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என தமிழக அரசு தரப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நளினி விடுதலை தொடர்பான ஆலோசனை குழு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு 2 வார கால அவகாசம் கேட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்களிடமே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்தபோது, இந்திய உளவு அமைப்பான ரா, ராஜபக்ஷவுக்கு எதிராகவும், பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் செயல்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் கூறியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தக் குற்றச்சாட்டை சமீபத்தில், இலங்கை அமைச்சர் நந்தன குணதிலக தெரிவித்திருந்தார்.
ஒற்றையாட்சியின் கீழ் ஜனாதிபதியின் தலைமைத்துவத்துடன் அனைவரும் சுதந்திரமாக சமஉரிமையுடன் வாழும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கூறினார். மக்களுடனான நல்லுறவுகளை தொடர்ந்து பேணும் நோக்கில் இராணுவ அலுவலகமொன்றை நேற்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்துப் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார்.



பாகிஸ்தானிலுள்ள ‘வேர்ல்ட் விஷன்’ எனும் நிவாரண உதவிகளுக்கான சர்வதேச அமைப்பு அலுவலகம் மீது துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்தத் தாக்குதலில் கையெறிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. பலியானவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலைக்கு அரிசியை விற்கும் வர்த்தகர்களைத் தேடிக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.கொழும்பில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மோதல்கள் முடிவடைந்த நிலையும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும் சிறந்த வாய்ப்பு என பீற்றர் றிக்கெட்ஸ் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.யுத்த நிறுத்த உடன்படிக்கை காலப்பகுதியில் குறித்த இரு சந்தேகநபர்களும் பொட்டு அம்மானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.