நளினி வழக்கு விசாரணையை இழுத்தடிப்பதாக நீதிமன்றம் குற்றச்சாட்டு!

March 11th, 2010

நளினியின் விடுதலை தொடர்பான வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என தமிழக அரசு தரப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நளினி விடுதலை தொடர்பான ஆலோசனை குழு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு 2 வார கால அவகாசம் கேட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்களிடமே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

இந்திய உளவு அமைப்பான ‘ரா’(RAW) மீதான குற்றச்சாட்டுக்கு நிரூபமா ராவ் மறுப்பு!

March 11th, 2010

இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்தபோது, இந்திய உளவு அமைப்பான ரா, ராஜபக்ஷவுக்கு எதிராகவும், பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் செயல்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் கூறியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தக் குற்றச்சாட்டை சமீபத்தில், இலங்கை அமைச்சர் நந்தன குணதிலக தெரிவித்திருந்தார்.
மேலும்

அனைவரும் சுதந்திரமாக சம உரிமையுடன் வாழும் வாய்ப்பு கிடைத்துள்ளது:யாழ்ப்பாணத்தில் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய!

March 11th, 2010

ஒற்றையாட்சியின் கீழ் ஜனாதிபதியின் தலைமைத்துவத்துடன் அனைவரும் சுதந்திரமாக சமஉரிமையுடன் வாழும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கூறினார். மக்களுடனான நல்லுறவுகளை தொடர்ந்து பேணும் நோக்கில் இராணுவ அலுவலகமொன்றை நேற்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்துப் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும்

வவுனியா அரச அதிபருடன் சீன தூதுவர் பேச்சு!

March 10th, 2010

வவுனியா அரச அதிபர் பீ.எம்.சாள்ஸ் அவர்களுடன் சீனாவுக்கான இலங்கை தூதுவர் பேச்சு நடாத்தியுள்ளார். வவுனியாவிற்கான விஜயத்தினை நேற்றையதினம் மேற்கொண்டிருந்த சீன தூதவர் வவுனியா அரச அதிபருடன் வவுனியா நிலை குறித்து கலந்துரையாடியுள்ளதுடன். சீன அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைதிட்டங்களையும் சீன உயர் ஸ்தானிகர் பார்வையிட்டுள்ளார்.

தமிழ் தேசியம் பற்றி பேசும் முன்னைநாள் மீன்பிடி அமைச்சின் ஆலோசகரும் மண்டையன் குழுவின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்!

March 10th, 2010


ஆர்.யோகராஜா
தமிழ் தேசியம், தாயகம், தன்னாட்சி என்று பேசுகின்றார் முன்னைநாள் சிங்கள அரசின் மீன்பிடி ஆலோசகரும், மண்டையன் குழுவின் தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரன். 1987-1989 கால பகுதிகளில் மண்டையன் குழு என்ற பெயரில் அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகளையும், விடுதலை புலிகளுக்க ஆதரவு வழங்கினர் என்ற பெயரில் படுகொலை செய்தும் பலாத்கார பிள்ளை பிடிப்பிலும் ஈடுபட்டு வந்த சுரேஸ் பிரேமசந்திரன், இன்று தமிழ் தேசியம் என்றும் விடுதலை புலிகளை அழித்த சிங்கள அரசு தமிழ் கூட்டமைப்பையும் அழிக்க முயற்சிக்கின்றது என்கின்றார் மண்டையன் குழுவின் தலைவர்.
மேலும்

புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஒஸ்லோ தீர்மானமும் அதை வைத்து தமிழர்களை ஏற்மாற்ற முயலும் த.தே.கூட்டமைப்பின்(TNA) மூத்த தலைமைகளும்!

March 10th, 2010


த.தே.கூ இனுள் எதேச்சாதிகாரம்

கடந்த 28-02-2010 அன்று தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கு முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு(த.தே.கூ) வெளியிட்ட பதிலறிக்கை 04-03-2010 அன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சில கருத்துக்களை தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி முன்வைக்க விரும்புகின்றது.
மேலும்

பாகிஸ்தானில் சர்வதேச அமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்:ஐவர் பலி!

March 10th, 2010

பாகிஸ்தானிலுள்ள ‘வேர்ல்ட் விஷன்’ எனும் நிவாரண உதவிகளுக்கான சர்வதேச அமைப்பு அலுவலகம் மீது துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்தத் தாக்குதலில் கையெறிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. பலியானவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
மேலும்

அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தக நிலையங்கள் இன்று முற்றுகை:அமைச்சர் பந்துல குணவர்தன!

March 10th, 2010

அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலைக்கு அரிசியை விற்கும் வர்த்தகர்களைத் தேடிக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.கொழும்பில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மேலும்

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ்-ரோஹித போகொல்லாகம சந்திப்பு!

March 10th, 2010

உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மோதல்கள் முடிவடைந்த நிலையும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும் சிறந்த வாய்ப்பு என பீற்றர் றிக்கெட்ஸ் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
மேலும்

பொட்டு அம்மானுடன் தொடர்புகளை பேணிய சுங்க உத்தியோகத்தர்கள் கைது!

March 10th, 2010

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.யுத்த நிறுத்த உடன்படிக்கை காலப்பகுதியில் குறித்த இரு சந்தேகநபர்களும் பொட்டு அம்மானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்